வவுனியாவில் பரபரப்பை ஏற்ப்படுத்திய சம்பவம்

வவுனியாவில் மாணவர்களை இலக்கு வைத்து குண்டுதாரிகள் வந்துள்ளதாக இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலால், பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலைக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா இறம்பைக்குளம் மகளீர் வித்தியாலத்திற்கு இன்றையதினம் சென்ற இருவர் தம்மை காவல்துறையினர் என அடையாளப்படுத்தியதுடன், பாடசாலையின் காவலாளியை அழைத்து மாணவர்களை இலக்குவைத்து இரண்டு குண்டுதாரிகள் நடமாடித்திரிவதுடன், இதனால் மாணவர்களை கூட்டமாக வெளியில் நடமாடித்திரிய வேண்டாம் என்ற தகவலை கூறிச்சென்றுள்ளனர். குறித்த தகவலை கடமையில் இருந்த காவலாளி பாடசாலையின் … Continue reading வவுனியாவில் பரபரப்பை ஏற்ப்படுத்திய சம்பவம்